
திக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன?
ஆக 02, 2021
Advertisement
விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.
இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!