
மீண்டும் நடிக்க வந்திருக்கும் தேங்காய் சீனிவாசன் பேரன்
டிச 09, 2021
Advertisement
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை. இப்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. துளசி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பேரன் யோகி நடிக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவி படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். யோகி தவிர சரண் ராஜ் மகன் தேஜா, சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
கே.பி.செந்தில் நாதன் இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறியதாவது: விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் மாயமாகி விடுகிறார்கள்.
காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.
கே.பி.செந்தில் நாதன் இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறியதாவது: விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் மாயமாகி விடுகிறார்கள்.
காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!