
படம் இயக்கும் அளவுக்கு அனுபவம் கொடுத்த கடக் சிங் : சிலாகிக்கும் பார்வதி
இந்த படத்தில் பார்வதி ஒரு தலைமை செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி கூறும்போது, “ஏற்கனவே மலையாளத்தில் டேக் ஆப் என்கிற படத்தில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த அனுபவம் இந்த படத்தில் நடிப்பதற்கு ரொம்பவே கை கொடுத்தது. இருந்தாலும் வட மாநிலத்தில் பணி புரியும் கேரளாவை சேர்ந்த பெண்ணாக இந்த படத்தில் நடித்ததால் நிஜத்திலேயே அது போன்று வடமாநிலத்தில் வேலை பார்த்த கேரள செவிலியர்கள் பலரிடம் அவர்கள் வடமாநில பாஷையை பேசும் விதம் குறித்து கேட்டு அறிந்து கொண்டு அதையும் படத்தில் பயன்படுத்தினேன்
அதுமட்டுமல்ல பங்கஜ் திரிபாதியும் நடிப்பில் பல புதிய விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடம் கற்றல் அனுபவமே புதுவிதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவாக பிரித்து தலைமைப்பொறுப்பை ஒவ்வொருவரிடமும் மாற்றி மாற்றி கொடுத்தார். இந்த அனுபவத்தை வைத்து நிச்சயமாக ஒரு படத்தை இயக்க முடியும்.. அதனால் ஒவ்வொரு நாள் காலையும் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்தபடி படப்படிப்பிற்கு கிளம்பி சென்றேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!