
துல்கரின் சுப் படப்பிடிப்பு நிறைவு
அக் 29, 2021
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதியில் நின்றிருந்த தனது படங்களின் படப்பிடிப்புகளை ஒவ்வொன்றாக முடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான்.. அந்தவகையில் மலையாளத்தில் குறூப், சல்யூட் மற்றும் தமிழில் ஹே ஷினாமிகா ஆகிய படங்களை முடித்துவிட்ட துல்கர் சல்மான், இந்தியில் சுப் என்கிற படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கருக்கு இது மூன்றாவது படம். இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து "பா", "சீனிகம்" ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் பால்கி தான் இந்தப்படத்தை இயகியுளார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கருக்கு இது மூன்றாவது படம். இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து "பா", "சீனிகம்" ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் பால்கி தான் இந்தப்படத்தை இயகியுளார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!