
துரந்தர்-2 படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு
ஏப் 11, 2026
Advertisement
ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், சஞ்சய் தத் நடிப்பில் வெளிவந்துள்ள படம் "துரந்தர் 2". கடந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஆயிரம் கோடிக்குமேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் "துரந்தர்-2" படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் "துரந்தர் 2" திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என வழக்கு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்த நீதிமன்றம் தணிக்கை சான்று பெற்ற திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் "துரந்தர்-2" படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் "துரந்தர் 2" திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என வழக்கு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்த நீதிமன்றம் தணிக்கை சான்று பெற்ற திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!