Advertisement

"நூற்றாண்டில்" அ.மருதகாசி

பயோகிராபி

Songwriter Maruthakasi

Advertisement

  • இயற்பெயர் - அய்யம்பெருமாள் மருதகாசி
  • சினிமா பெயர் - அ.மருதகாசி
  • பிறப்பு - 13 - பிப்ரவரி - 1920
  • இறப்பு- 29 - நவம்பர் - 1989
  • பிறந்த இடம் - மேலக்குடிகாடு - தமிழ்நாடு
  • சினிமா அனுபவம் 1949 - 1989
  • பணி - பாடலாசிரியர்
  • துணைவி - தனக்கோடி அம்மாள்
  • குழந்தைகள் - 6 மகன்கள் - 3 மகள்கள்
  • பெற்றோர் அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்
  • உடன் பிறந்தவர்கள் அ முத்தையன் (சகோதரர்)
  • புனைப்பெயர் திரைக்கவித்திலகம்

Advertisement

வரலாறு

Maruthakasi History

Advertisement

1950களில் மிக வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர் அ மருதகாசி. ஜி ராமனாதன், கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா என அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இவர், மேலக்குடிகாடு என்ற சிற்றூரில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

 

இவரது கைவண்ணத்தில் உருவான விவசாயம் சார்ந்த திரைப்பாடல்கள் தமிழகத்தின் கடைக்கோடி சாமானியனும் இன்றளவும் முணுமுணுக்கக் கூடியது என்றால் அது மிகையன்று. "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி", "ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே", "மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா" என்று வேளாண் பெருமக்களின் பெருமையை கூறும் இந்தப் பட்டியல் நீளும். இன்டர்மீடியட் வரை படித்த இவர், ஆரம்பக் காலங்களில் நாடக நடிகராகவும் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும,; நாடகப்பாடல்கள் எழுதியும் பணிபுரிந்திருக்கின்றார்.

 

திருச்சி லோகனாதன் தான் அமைத்திருந்த மெட்டுகளுக்கு, இவர் எழுதியிருந்த பாடல்களை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாடிக் காட்ட, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து அழைப்பு வந்தது அ.மருதகாசிக்கு. "பெண்ணெனும் மாயா பேயாம் பொய் மாதராய்" என்று ஆரம்பமாகும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "மாயாவதி" படப்பாடல்தான் இவர் எழுதிய முதல் திரைப்படப்பாடல். இப்படம் வெளியான ஆண்டு 1949. இதனைத் தொடர்ந்து "தூக்கு தூக்கி", "பாசவலை", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "மங்கையர் திலகம்", "தாய்க்குப் பின் தாரம்", சதாராம், "அமரதீபம்", "மல்லிகா", "நீலமலைத்திருடன்", "சாரங்கதாரா", "உத்தமபுத்திரன்", "பாகப்பிரிவினை", "பாவை விளக்கு", "மன்னாதி மன்னன்", என 1950களில் ஏராளமான படங்களுக்கு எண்ணற்ற வெற்றிப் பாடல்களை தந்து பிஸியான பாடலாசிரியராக இருந்து வந்தார்.

 

60களில் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் பார்வை கவிஞர் கண்ணதாசனின் மீது விழ, இவருக்கு சற்று வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அல்லி பெற்ற பிள்ளை என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நஷ்டம் அடைந்தார். 1967 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு மீண்டு வந்தபின் தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடிக்கவிருந்த "மறுபிறவி" என்ற திரைப்படத்திற்கு இவரை பாடல் எழுத தேவர் கேட்டுக் கொண்டார். ஒரு பாடல் எழுதிய நிலையில் படத்தை தொடர முடியாமல் போயிற்று. அதன் பின் தேவர் தயாரிதத "தேர்த்திருவிழா", "விவசாயி" வெள்ளிக்கிழமை விரதம் என்று தொடர்ந்து தேவர் தயாரித்து வந்த படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்று வந்தன. ஏறக்குறைய 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய இவர் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

 

பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரும் விரும்பும் வண்ணம் காதல், பாசம், சோகம், தத்துவம், வீரம் என்று அத்தனை பரிமாணங்களிலும் காலத்தால் அழிக்க முடியா காவியப் பாடல்களைத் தந்த இந்த கவிஞரை அவரது நூற்றாண்டில் நினைவு கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.

 



பாடல்கள்

அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில

S.No. பாடல் படம் பாடியவர்கள் இசையமைப்பாளர்
1 சொட்டு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே ஆடவந்த தெய்வம் கே வி மகாதேவன் டி ஆர் மஹாலிங்கம்-பி சுசிலா
2 ஆசை கொண்டேன் அமுதமே ஆடவந்த தெய்வம் கே வி மகாதேவன் டி ஆர் மஹாலிங்கம்
3 ஆசை பொங்கும் அழகு ரூபம் ஆசை டி ஆர் பாப்பா ஏ எம் ராஜா-ஜிக்கி
4 மாசிலா உண்மைக் காதலே அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி ஏ எம் ராஜா-பி பானுமதி
5 உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி பி பானுமதி
6 உல்லாச உலகம் உனக்கே சொந்தம் அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி கண்டசாலா
7 என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி பி பானுமதி
8 அழகான பொண்ணு நான் அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி ஜிக்கி
9 சலாம் பாபு சலாம் பாபு அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி பி பானுமதி
10 சின்னஞ்சிறு சிட்டே எந்தன் அலிபாபாவும் 40 திருடர்களும் எஸ் தக்ஷிணாமூர்த்தி எஸ் சி கிருஷ்ணன்-ஜிக்கி
11 பச்சைக் கிளி பாடுது அமரதீபம் டி சலபதிராவ் ஜிக்கி
12 என் கோபம் பொல்லாது ஜாக்கிரதை அறிவாளி எஸ் வி வெங்கட்ராமன் டி எம் சௌந்தாராஜன்-பி பானுமதி
13 அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே அறிவாளி எஸ் வி வெங்கட்ராமன் டி எம் சௌந்தர்ராஜன்
14 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் அழகுநிலா கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்
15 மூங்கில் மரக் காட்டினிலே அழகுநிலா கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா
16 சொக்குதே மனம் சுத்துதே ஜகம் பாக்தாத் திருடன் கோவிந்தராஜுலு நாயுடு பி சுசிலா
17 யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே பாக்தாத் திருடன் கோவிந்தராஜுலு நாயுடு டி எம் சௌந்தர்ராஜன்
18 துணிந்த பின் மனமே துயரம் தேவதாஸ் சி ஆர் சுப்பராமன் கண்டசாலா
19 தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் டாக்டர் சாவித்திரி ஜி ராமனாதன் பி லீலா
20 ஆட்டங்கள் பல உண்டு கடவுள் மாமா டி ஜி லிங்கப்பா எஸ் ஜானகி
21 கொஞ்சி கொஞ்சி பேசி கைதி கண்ணாயிரம் கே வி மகாதேவன் பி சுசிலா
22 நீயும் நானும் ஒன்று கொடுத்து வைத்தவள் கே வி மகாதேவன் பி சுசிலா
23 கண்டதை கேட்டதை நம்பாதே கொங்கு நாட்டு தங்கம் கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்
24 சந்திரனைக் காணாமல் அல்லி முகம் குலமகள்ராதை கே வி மகாதேவன் டி எம்; சௌந்தர்ராஜன்-பி சுசிலா
25 கள்ளமலர் சிரிப்பிலே - குலமகள்ராதை குலமகள்ராதை கே வி மகாதேவன் பி சுசிலா
26 மாமா மாமா மாமா குங்குமம் கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்-கே ஜமுனாராணி
27 என்னை விட்டு ஓடிப்போக முடியுமா குங்குமம் கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா
28 மியாவ் மியாவ் பூனைக்குட்டி குங்குமம் கே வி மகாதேவன் எம் எஸ் ராஜேஸ்வரி
29 ஜெகம் புகழும் புண்ணியக் கதை லவகுசா கே வி மகாதேவன் பி லீலா
30 ஊருக்கும் தெரியாது மாடப்புறா கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்-சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
31 மனதில் கொண்ட ஆசைகளை மாடப்புறா கே வி மகாதேவன் பி சுசிலா-சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
32 மணப்பாறை மாடுகட்டி மக்களைப் பெற்ற மகராசி கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
33 நீலவண்ணக் கண்ணனே மல்லிகா டி ஆர் பாப்பா பி சுசிலா
34 வருவேன் நான் உனது மாளிகையின் மல்லிகா டி ஆர் பாப்பா ஏ எம் ராஜா-பி சுசிலா
35 எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் மல்லிகா டி ஆர் பாப்பா ஏ எம் ராஜா-பி சுசிலா
36 ஆடாத ஆட்டமெல்லாம் மனமுள்ள மறுதாரம் கே வி மகாதேவன் சீர்காழி எஸ்; கோவிந்தராஜன்-ஜிக்கி
37 இன்பம் எங்கே இன்பம் எங்கே மனமுள்ள மறுதாரம் கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்
38 நீலவண்ண கண்ணா வாடா மங்கையர் திலகம் எஸ் தக்ஷிணாமூர்த்தி ஆர் பாலசரஸ்வதி தேவி
39 ஆடாத மனமும் உண்டோ மன்னாதி மன்னன் விஸ்வநாதன் ராமமூர்த்தி டி எம் சௌந்தர்ராஜன்-எம் எல் வசந்தகுமாரி
40 ஏரிக்கரையின் மேலே முதலாளி கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
41 யவ்வன ராணிதான் முதலாளி கே வி மகாதேவன் ஜிக்கி
42 சத்தியமே லட்சியமாய் கொள்ளடா நீலமலைத் திருடன் கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
43 கொஞ்சும் மொழி பெண்களுக்கு நீலமலைத் திருடன் கே வி மகாதேவன் ஜிக்கி
44 வாய்மையே வெல்லுமடா நேர்வழி பி எஸ் திவாகர் டி எம் சௌந்தர்ராஜன்
Advertisement
45 கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நினைப்பதை முடிப்பவன் எம் எஸ் விஸ்வநாதன் டி எம் சௌந்தர்ராஜன்
46 ஆலமரத்துக் களி ஆளப் பார்த்து பாலாபிஷேகம் சங்கர் கணேஷ் வாணிஜெயராம்
47 மச்சானே அச்சாரம் போடு பாலாபிஷேகம் சங்கர் கணேஷ் கிருஷ்ணமூர்த்தி-வாணிஜெயராம்
48 அன்பினாலே உண்டாகும் இன்பநிலை பாசவலை கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமன்
49 ஆயிரம் கண் போதாது பாவை விளக்கு கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமன்
50 காவியமா நெஞ்சின் ஓவியமா பாவை விளக்கு கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமன்-பி சுசிலா
51 வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி பாவை விளக்கு கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமன்-சிவாஜி
52 பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு படிக்காத மேதை கே வி மகாதேவன் ஏ எல் ராகவன்-கே ஜமுனாராணி
53 சீவி முடிச்சு சிங்காரிச்சு படிக்காத மேதை கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
54 மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே தாய்க்குப் பின் தாரம் கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
55 தென்றல் உறங்கிய போதும் பெற்ற மகனை விற்ற அன்னை விஸ்வநாதன் ராமமூர்த்தி ஏ எம் ராஜா-பி சுசிலா
56 ஏர்முனைக்கு நேர் இங்கே பிள்ளைக் கனியமுது கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
57 அழகே அமுதே ராஜா மலையசிம்மன் விஸ்வநாதன் ராமமூர்த்தி பி பி ஸ்ரீநிவாஸ்-பி சுசிலா
58 இதயம் தன்னையே ராஜராஜன் கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-ஏ பி கோமளா
59 சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் ரம்பையின் காதல் டி ஆர் பாப்பா சீர்காழி எஸ் கோவிந்தராஜன்
60 வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் சபாஷ் மாப்ளே கே வி மகாதேவன் பி பி ஸ்ரீநிவாஸ்
61 சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் சபாஷ் மாப்ளே கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்
62 யாருக்கு யார் சொந்தம் என்பது சபாஷ் மாப்ளே கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா
63 நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே சதாரம் ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்
64 கம கமவென நறுமலர் மணம் வீசுதே சமயசஞ்சீவி ஜி ராமனாதன் பி பி ஸ்ரீநிவாஸ்-ஜிக்கி
65 தென்றல் வந்து விளையாடும் சமயசஞ்சீவி ஜி ராமனாதன் ஜிக்கி
66 வீணை கொடியுடைய வேந்தனே சம்பூர்ண இராமாயணம் கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமன்-திருச்சி லோகனாதன்
67 கண்களால் காதல் காவியம் சாரங்கதாரா ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்-ஜிக்கி
68 வசந்த முல்லை போலே வந்து சாரங்கதாரா ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்
69 தை பிறந்தால் வழி பிறக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா
70 என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் தங்கப்பதுமை விஸ்வநாதன் ராமமூர்த்தி பி சுசிலா
71 சுந்தரி சௌந்தரி நிரந்தரியே தூக்கு தூக்கி ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்-பி லீலா-ஏ பி கோமாளா
72 கண்வழி புகுந்து கருத்தினில் வளர்ந்து தூக்கு தூக்கி ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்-எம் எஸ் ராஜேஸ்வரி
73 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு உத்தமபுத்திரன் ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா
74 மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக உத்தமபுத்திரன் ஜி ராமனாதன் பி சுசிலா-ஜிக்கி
75 அன்பே அமுதே அருங்கனியே உத்தமபுத்திரன் ஜி ராமனாதன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா
76 தேடிடுதே வானமிங்கே உத்தமி பெற்ற ரத்தினம் டி சலபதிராவ் பி பி ஸ்ரீநிவாஸ்
77 சீர் உலாவும் இன்ப நாதம் வடிவுக்கு வளைகாப்பு கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா
78 அடிக்கிற கைதான் அணைக்கும் வண்ணக்கிளி கே வி மகாதேவன் பி சுசிலா-திருச்சி லோகனாதன்
79 வண்டி உருண்டோட அச்சாணி தேவை வண்ணக்கிளி கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா
80 சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா வண்ணக்கிளி கே வி மகாதேவன் பி சுசிலா
81 மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் வண்ணக்கிளி கே வி மகாதேவன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன்
82 சித்தாடை கட்டிக்கிட்டு வண்ணக்கிளி கே வி மகாதேவன் பி சுசிலா-எஸ் சி கிருஷ்ணன்
83 என்னாளும் வாழ்விலே விடிவெள்ளி ஏ எம் ராஜா பி சுசிலா
84 என்னம்மா சிங்கார கண்ணம்மா விவசாயி கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா
85 கடவுள் எனும் முதலாளி விவசாயி கே வி மகாதேவன் டி எம் சௌந்தர்ராஜன்
86 ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே பாகப்பிரிவினை விஸ்வநாதன் ராமமூர்த்தி சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-எல் ஆர் ஈஸ்வரி
87 தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது வெள்ளிக்கிழமை விரதம் சங்கர் கணேஷ் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா
88 ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தமடம் ஆயிரம் ரூபாய் கே வி மகாதேவன் பி சுசிலா
89 எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா நீங்காத நினைவு கே வி மகாதேவன் பி சுசிலா
90 என்னைத் தெரியலையா யாருக்கு சொந்தம் கே வி மகாதேவன் ஜே பி சந்திரபாபு
91 வாராய் நீ வாராய் மந்திரிகுமாரி ஜி ராமனாதன் திருச்சி லோகனாதன்-ஜிக்கி