என் வழி... அரசியல் வழி...
பயோகிராபி

பயோடேட்டா
- இயற்பெயர்
- சிவாஜிராவ் கெயிக்வாட்
- சினிமா பெயர்
- ரஜினிகாந்த்
- புனைப்பெயர்
- சூப்பர் ஸ்டார்
- பிறப்பு
- 12-டிசம்பர்-1950

சூப்பர் ஸ்டார்

2000ல் இந்திய அரசின் "பத்ம பூஷண் விருது"
2016ல் "பத்ம விபூஷண் விருது"
2019ல் "கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது"

1978ல் சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "முள்ளும் மலரும்" படத்திற்காக வழங்கப்பட்டது.
1982ல் சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "மூன்று முகம்" படத்திற்காக கிடைத்தது.
1999ல் சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "படையப்பா" படத்திற்காக
2005ல் ‛‛சந்திரமுகி’’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது.
2007ல் ‛‛சிவாஜி’’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது.
1984ல் தமிழக அரசின் "கலைமாமணி விருது" விருது
1989ல் "எம்.ஜி.ஆர் விருது"
1984ல் சிறந்த நடிகருக்கான "பிலிம் பேர் விருது", "நல்லவனுக்கு நல்லவன்" படத்திற்காக கிடைத்தது
2016ல் ஆந்திர அரசின் நந்தி விருது
1984ல் "நல்லவனுக்கு நல்லவன்" படத்திற்காக நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது".
1985ல் "ஸ்ரீராகவேந்திரர்" படத்திற்காக நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது".
1988ல் சிறந்த சாதனையாளருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது" "ப்ளட் ஸ்டோன்" படத்திற்காக
1991ல் "தளபதி" படத்திற்காக "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"
1992ல் "அண்ணாமலை" படத்திற்காக, "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"
1993ல் "வள்ளி" படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"
1995ல் "முத்து" படத்திற்காக, நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"
"ரஜினிகாந்த்" அவர்களின் போட்டோ தொகுப்புகள்





















நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவரது தந்தை ராணோஜி ராவ், கர்நாடக காவல்துறையில் காவலராக பணி புரிந்தவர். ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான ஆச்சார்யா பாட சாலையில் தனது எஸ்.எஸ்.எல்.சி பள்ளிப் படிப்பை படித்து முடித்தார். அதுவரை இவர் உணராத பக்தி அனுபவங்களை இந்தப் பள்ளி இவருக்கு உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மாலைநேர பிரார்த்தனை, தியானம், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி எல்லாம் இங்கே தான் இவர் முதலில் கற்றுக் கொண்டார்.
இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினிக்கு இந்தப் பள்ளி, அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது. ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த ரஜினி, மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர் பணி. சிவாஜி நகர் சாமராஜ்பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்தார். இவருக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கின்றார் என்பதை அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நண்பர் ராஜ் பகதூர்.
பொழுது போக்கிற்காக நாடகம் போடும் இவருக்கு அப்போதைய ரஜினியின் வேகமான நடை சுறுசுறுப்பு பிடித்துப் போக தனது "குருஷேத்திரம்" நாடகத்தில் துரியோதனன் வேடமேற்று நடிக்க வைத்தார். தொடர்ந்து சினிமாவிலும் ரஜினியை நடிக்க தூண்டியவரும் இவரே. அதன் விளைவு தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். நேர்காணலுக்கு ரஜினியை வரச்சொல்லி கடிதம் வர, அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.