இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். தற்போது மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே ரங்கீலா என்கிற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்த சன்னி லியோன் அது பாதியில் நிற்கும் நிலையில், தற்போது ஷீரோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் சில சண்டைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யும்போதே இயக்குனரை தனியாக அழைத்த அவரது மேனேஜர், சண்டைக்காட்சிகளில் சன்னி லியோன் நடிக்க ஆர்வம் காட்டுவார், ஆனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.. நீங்கள் அதற்காக டூப் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் இதை தெரிந்து கொண்ட சன்னி லியோன், தானே ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறியதோடு அதற்காக முன்கூட்டியே கேரளா வந்து ஒரு வாரம் ரிகர்சல் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமல்ல சண்டைக் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்தும் அசத்தினாராம்