துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
'உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பெயர்களை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது' என ஆஸ்திரேலிய நிருபர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பெயர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் பிரபல பாப் நடிகருமான நிக் ஜோனஸ் ஆகியோர் இந்த பெயர்களை அறிவித்தனர்.
'இவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடும் அளவுக்கு திரையுலகுக்கு இவர்கள் என்ன பங்களிப்பு அளித்துள்ளனர்' என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு 'இதோ நீங்கள் கேட்ட தகுதி. கடந்த 20 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளேன். அதைத் தவிர ஹாலிவுட்டிலும் நடித்துள்ளேன். அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பே வாட்ச்' என்ற 'டிவி' தொடரிலும் நடித்துள்ளேன்; இது போதுமா' என பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். இதையடுத்து நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் தன் தனிப்பட்ட விபர குறிப்புகளை மறைத்துள்ளார். தகுந்த பதில் அளித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.