ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் |
'உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பெயர்களை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது' என ஆஸ்திரேலிய நிருபர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பெயர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் பிரபல பாப் நடிகருமான நிக் ஜோனஸ் ஆகியோர் இந்த பெயர்களை அறிவித்தனர்.
'இவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடும் அளவுக்கு திரையுலகுக்கு இவர்கள் என்ன பங்களிப்பு அளித்துள்ளனர்' என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு 'இதோ நீங்கள் கேட்ட தகுதி. கடந்த 20 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளேன். அதைத் தவிர ஹாலிவுட்டிலும் நடித்துள்ளேன். அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பே வாட்ச்' என்ற 'டிவி' தொடரிலும் நடித்துள்ளேன்; இது போதுமா' என பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். இதையடுத்து நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் தன் தனிப்பட்ட விபர குறிப்புகளை மறைத்துள்ளார். தகுந்த பதில் அளித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.