இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிகப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் சிறையில் இருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான். அது மட்டுமல்ல இவர் கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட.
இவர் இந்த தங்க கடலுக்கு தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் டிஜிபி ராமச்சந்திர ராவ் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைகள் அமலாக்க துறையில் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டு அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.