எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‛இருவர்' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‛ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன்' என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், சமீபகாலமாக ஓரளவு வெயிட் போட்டு காணப்படுவதால் சோசியல் மீடியாவில் அவரை பலரும் உருவ கேலி செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛கடந்த 2011ம் ஆண்டு எனது மகள் பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது. ஆனால் இதை வைத்து பலரும் பலதரப்பட்ட கேள்வி எழுப்புகிறார்கள். உடல் எடை கூடியதற்கு என்ன காரணம்? ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். என் மீது இவர்களுக்கு ஏன்தான் இத்தனை அக்கறையோ தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த பதிலும் கொடுக்க நான் விரும்பவில்லை. என்னுடைய எடையை நினைத்து நான் ஒருபோதும் பீல் பண்ணியதில்லை. அதேபோல் என் உடல் எடையை வைத்து யார் என்னை எப்படி விமர்சித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதுமில்லை'' என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.