மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு |

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்த நிலையில், 'பிலிம்பேர் ஓடிடி விருதுகள்-2024' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சன், திருமணமான ஆண்களுக்கு ஒரு அறிவுரையையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ''படங்களில் நடிக்கும்போது இயக்குனரின் பேச்சைக் கேட்பது போல் வீட்டில் மனைவியின் பேச்சையும் கேட்பீர்களா?'' என வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு அபிஷேக்கும் வேடிக்கையான முறையில் பதிலளித்தார். "ஆம், திருமணமான எல்லா ஆண்களும் இதையே செய்ய வேண்டும். உங்க மனைவி சொல்றதைக் கேளுங்க" என்றார். விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் சூழலில் அபிஷேக் பச்சனின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது.




