பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

பிரபல நடிகரான ராகவ் ரங்கநாதன் செவ்வந்தி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அந்த தொடரில் அவர் இறந்தது போல் காண்பிக்கப்பட்டு ராகவ் கதாபாத்திரத்திற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டனர். அதன்பின் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகமல் இருந்த ராகவ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ, ரேகா கிருஷ்ணப்பா, வடிவுக்கரசி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
தற்போது அந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில், நடிகர் ராகவ் ரங்கநாதனும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதுகுறித்து பேசுகையில், 'கண்ணெதிரே தோன்றினாள் என்ற சூப்பர் ஹிட் தொடரில் இணைவதில் ஆவலாக உள்ளேன். நீண்டநாட்களுக்கு பிறகு மாளவிகா அவினாஷூடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகமாக இருக்கிறேன் ' என்று கூறியுள்ளார்.