கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
பிரியமானவள் தொடரின் மூலம் பிரபலமானவர் அபி நவ்யா. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், சின்னத்திரையில் நடிப்பதற்காக பட்ட கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், 'சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய காலங்களில் 250க்கு மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். பெரும்பாலான இடங்களில் ஓப்பனாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கேட்டனர். சினிமாவில் மட்டுமல்ல சீரியலில் நடிப்பதும் கஷ்டமான விஷயம் தான். அதிலும் பெண்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சினிமாவில் இன்னும் மீ டூ புகார் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால், பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார்.