லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஜி தமிழின் செம்பருத்தி தொடர் தமிழ் சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலாக பல நாட்கள் வலம் வந்தது. செம்பருத்தி தொடரின் ஆதி-பார்வதி இடையேயான காதல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு பல காதல் ஸ்டேட்டஸ்களுக்கு ஆதி-ஷபானா கெமிஸ்ட்ரி டெம்பிளேட் ஆக மாறியது. இது, தொடரின் டிஆர்பிக்கும் முக்கிய காரணமாக இருந்தது வந்தது. இந்நிலையில் கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனையடுத்து ஆதி கதாபாத்திரத்தை பிரபல விஜே அக்னி ஏற்று நடித்து வருகிறார். ஆனால், கார்த்திக் ராஜ் விலகிய நாள் முதல் செம்பருத்தி தொடர் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
கதைக்களத்தில் பல ட்விஸ்டுகளையும் வித்தியாசமான முயற்சிகளையும் சீரியல் குழுவினர் எடுத்து வந்தாலும் செம்பருத்தி தொடரால் பழைய இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் புதிதாக ஒரு அம்மன் எபிசோடை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. அதில், அகிலாண்டேஸ்வரிக்காக மிகவும் கஷ்டமான பரிகாரம் ஒன்றை பார்வதி செய்ய, பார்வதிக்கு உதவும் பொருட்டு ஒன்பது அம்மன்கள் வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஒன்பது அம்மன்களாக தேவயாணி, நக்ஷத்திரா, ரக்ஷா ஹோலா, தர்ஷனா அசோகன், கீர்த்தனா பொதுவல் உள்ளிட்ட ஜி தமிழின் முன்னணி சீரியல்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் நடிகைகள் தோன்றவுள்ளனர். இதன் மூலம் மற்ற சீரியல்களின் ஆடியன்ஸ்களையும் செம்பருத்தி சீரியலை பார்க்க வைக்கும் யுக்தியை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ஜி தமிழ் டிவி நேயர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சரிந்த தொடரை சக்சஸ் பாதைக்கு அழைத்து செல்ல இந்த ஒன்பது நாயகிகள் உதவுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.