Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி அதிகம் - ஜோதிகா பேட்டி

07 அக், 2021 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Jyothika-about-UdanPirappe

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடித்துள்ள படம் ‛உடன்பிறப்பே'. ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள இப்படம் அண்ணன் - தங்கை இடையேயான பாச படமாக, குடும்பங்கள் ரசிக்கும் படமாக தயாராகி உள்ளது. அண்ணனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். அக்.,14ல் ஓடிடியில் இப்படம் வெளியாகிறது.

ஜோதிகா அளித்த பேட்டி : ‛என் சினிமா பயணம் அழகானது. இந்த நேரத்தில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒருவர் பிரியதர்ஷன் மற்றொருவர் வசந்த். எதுவும் புரியாத வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என் கையை பிடித்துக் கொண்டு சூர்யா அழைத்து போனார். வாழ்கையிலும், சினிமாவிலும் இங்கே நிறைய கற்றுக்கொண்டேன்.

புதிய இயக்குனர்களிடம் நிறைய கதைகள் கேட்டேன். முடிந்தவரை என் படைப்புகளை சிறப்பானதாக கொடுத்து வருகிறேன். பெண்கள் வலிமையானவர்கள், அமைதியானவர்கள், சக்தி படைத்தவர்கள் என இப்படி தான் 90 சதவீத பெண்கள் வாழ்க்கை வாழ்கிறார்கள். பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி இருப்பதாக நான் நம்புறேன்..

இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. 50வது படமாக உடன்பிறப்பே அமைந்ததில் சந்தோஷம். சசிகுமார் இந்த படத்தில் மட்டுமல்ல நிஜமாகவே சகோதரன் போல் எனக்கு தெரிந்தார். சமுத்திரகனி கூட வேலை பார்த்தது ஒரு சைக்காலஜி மேட்சிங் மாதிரி இருந்தது. சூரி கூட தான் செட்டில் அதிகமாக பேசினேன். எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்துள்ளார். இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடியில் 4 மொழிகளில் 'தலைவி'ஓடிடியில் 4 மொழிகளில் 'தலைவி' பிரபாஸின் 25வது படம் ஸ்பிரிட் பிரபாஸின் 25வது படம் ஸ்பிரிட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

14 அக், 2021 - 18:39 Report Abuse
ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி அந்த பெண் கோயிலை பற்றி எதுவும் தராகுறவாய் பேசிவிடவில்லை மாறாக அரசு மருத்துவமனையை சுத்தமாக வையுங்கள் என்றுதான் கூறினார்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 அக், 2021 - 04:55 Report Abuse
meenakshisundaram ஆமா உனக்கு புத்தி வந்துடுச்சா ?தஞ்சாவூர் கோவிலுக்கு போயிட்டு ஏதோ பிதற்றினாயே ?
Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08 அக், 2021 - 06:24 Report Abuse
வெகுளி கொஞ்சமாவா பேசின?....
Rate this:
07 அக், 2021 - 23:40 Report Abuse
சாம் அது வாயை கொடுத்து சூவை புண்ணாக்கி கொண்ட பின் புரிகிறது போல....ஹாஹாஹா ..
Rate this:
07 அக், 2021 - 23:12 Report Abuse
Ranjit Kumar ஆமாம், திமுக ஆட்சியில் மௌனத்திர்க்கு சக்தி அதிகம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in