இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மறைந்த நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்த அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்றது அவரது லட்சியமாக இருந்தது. தற்போது விவேக் மறைந்து விட்ட நிலையில் காமெடி நடிகர் தாமு, கலாம் விவேக் என்ற அமைப்பை தொடங்கி இருப்பதாகவும், இது விவேக்கின் கிரீன் கலாம் அமைப்புக்கு போட்டியானது என்றும் தகவல்கள் வெளியானது.
இதுறித்து தாமு கூறியிருப்பதாவது: விவேக்கின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விவேக் பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து வந்த மரம் நடும் பணியை பலரும் செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதுவே விவேக்கின் வெற்றிதான்.
விவேக் பல்லாண்டுகளாக எனக்கு நண்பர். அவர் தொடங்கியிருக்கும் அமைப்புக்கு எதிராக நான் கலாம் விவேக் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நான் அப்படி சொல்லவில்லை. நான் போகும் இடங்களில் நடும் மரக்கன்றுகளுக்கு கலாம் விவேக் என்று பெயர் வைக்கப் போவதாகத்தான் சொன்னேன். அமைப்பு தொடங்கப்போவதாக சொல்லவில்லை.
விவேக் தொடங்கியிருக்கும் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் என்னை அழைத்தால் நான் கலந்து கொள்வேன். எனது நண்பனின் அமைப்புக்கு ஆதரவாக இருப்பேன். என்கிறார் தாமு.