ஓடிடியில் லீட் பண்ணுவாரா 'லீடர்' : இந்த வாரப் பட்டியல் வெளியானது...! | திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார் | ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3' | சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம் | பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா | பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா | வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி |

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தாலும் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் விரக்தியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் வேலையிலோ, உங்கள் படிப்பிலோ அல்லது ஒருவரை காதலித்து அவருடன் உறவு கொள்வதிலோ இல்லை என்பது ஒரு நாள் உங்களுக்கு புரியும். நமக்கு முன்னே நடந்து சென்றவர்களின் காலடிகளை பின்தொடர்ந்து செல்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. மற்றவர்களை போல் நாம் நடந்துகொள்வதால் ஒருபோதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படாது. புதிய விஷயங்களை தேடி கண்டறிவதிலும், நம்பிக்கையிலும், நம் மனது சொல்வதை கேட்டு அதன்படி நடந்துகொள்வதிலும் தான் இருக்கிறது. நமக்கு நாம் கருணையாக இருக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது எப்போதும் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை பொருத்தே அமையும். நமது மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை.. அது நாம் நாமாக வாழும் போது தான் கிடைக்கிறது. மகிழ்ச்சி என்பது உங்களை பொருத்தே அமைகிறது", என விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




