இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடிக்க 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, இலங்கை என விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நின்று போய் இருந்தது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய மற்றொரு படமான 'மதராஸி' படத்தை முடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் போய்விட்டார் என்றார்கள். அதற்கடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியதும் படப்பிடிப்பை மீண்டும் தாமதப்படுத்தியதாகச் சொன்னார்கள். தற்போது வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால் 'பராசக்தி' உள்ளிட்ட தன்னுடைய மற்ற பட வேலைகளை ஆகாஷ் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.




