ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'ஏஸ்'. இப்படம் வருகின்ற மே 23ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ருக்மணி வசந்த். இவர் தான் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
ஏஸ் பட விழாவில் ருக்மணி வசந்த் தமிழ் பேசியது எப்படி என்பது குறித்து அவர் கூறுகையில், "கன்னட படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த போது 'ஏஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க நான் கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன். அதனால் தான் உங்களோடு இப்படி தமிழில் பேச முடிகிறது. விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இதுவரை மிக அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். ஆனால், ஏஸ் ஒரு காமெடி கலந்த அழகான படம்" என தெரிவித்துள்ளார்.




