இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சினிமாவில் வாய்ப்புக்காக யாராவது அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னால் அவர்களை செருப்பால் அடிங்கள் என நடிகர் விஷால் தெரிவித்தார். மேலும் நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்த கேள்விக்கு அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். அதையடுத்து என்னிடத்தில் பல செருப்புகள் உள்ளன என்று விஷாலை மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில் அவர் எக்ஸ் பக்கத்தில் இன்னொரு பதிவு போட்டுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட பெண்கள் அதிகமான உழைப்பை கொடுத்தாலும் விருந்துகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகெலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள். ஆண் எப்போதுமே ஒரு ஆண். அவன் மட்டுமே சரியானவன் என்று துரதிஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரிக்கிறார்கள். என்ன பரிதாபமான உலகம் இது என்று தெரிவித்திருக்கிறார்.




