ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் | 'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' |

பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.
சுதந்திர காலத்துக்கு முந்தைய படம், கேஜிஎப் என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் சுரங்கம் உருவாகும் ஆரம்ப கட்டம் என்பது மட்டும் டிரைலரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அங்குள்ள பூர்வகுடிகளுக்கும், அவர்களை அடிமைப்படுத்தி தங்கத்தைத் தோண்டி எடுக்க முயலும் ஆங்கிலேயே அதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
அடையாளமே தெரியாத அளவிற்கான தோற்ற மாற்றத்தில் விக்ரம் உள்ளார். முன் தலையில் முடியில்லாமல், பின் தலையில் சடை விழுந்த நீளமான முடி, இடுப்பில் ஒரே ஒரு சிறிய துண்டு, கையில் நீளமான கம்பு என வழக்கம் போல அவரது நடிப்பில் மிரட்டுகிறார். விக்ரமின் மனைவியாக (?) பார்வதியா அது என அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். சூனியப் பெண்ணாக மாறுபட்ட தோற்றத்தில் மாளவிகா மோகனன் உள்ளார்.
இரண்டு நிமிடம் ஓடும் டிரைலரில் சண்டைக் காட்சிகள் மட்டுமே அதிகம் உள்ளது. இருட்டான காட்சிகள், மிக மோசமான விஎப்எக்ஸ், குறிப்பாக அந்த கரும்புலி என அவசரத்தில் உருவாக்கப்பட்டது போல இருக்கிறது. 'கன்டன்ட்' ஆக படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பதை டிரைலர் உணர்த்தவில்லை. நாமாகவே சிலவற்றை யூகிக்க மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
மேக்கப்மேன், காஸ்டியுமர், ஆர்ட் டைரக்டர் ஆகியோருக்கு படத்தில் அதிக வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
ஹாலிவுட் படமான 'அப்போகலிப்டோ', பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பரதேசி' ஆகிய படங்களின் சாயல் டிரைலர் முழுவதும் தெரிகிறது.
விக்ரம், பார்வதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பு படம் வெளிவந்த பின் பேசப்படலாம். படமாக எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியை ரஞ்சித் முன் வைக்கிறது இந்த டிரைலர். படம் வரும் வரை காத்திருந்தால் மட்டுமே டிரைலரைப் பார்த்து எழும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.




