சிக்மா பாடல் டான்ஸ் : நடிக்க ஆசைப்படுகிறாரா ஜேசன் சஞ்சய் | சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம் | பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் |

அந்த காலத்தில் ஒலிசித்திரம் என்ற பெயரில் ஒரு படத்தின் வசனத்தை மட்டும் ஒலிபரப்புவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், பட்டிக்காடா பட்டணமா, பிற்காலத்தில் விதி, திரிசூலம், கவுரவம் உள்ளிட்ட படங்கள் ஒலிசித்திரத்தின் மூலம்தான் மக்களிடம் அதிக அளவில் சென்றடைந்தது.
இந்த கான்செப்டில் உருவானதுதான் ஆடியோ ஓடிடி. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கடாசலம் 'ரேடியோ ரூம்' என்ற பெயரில் இதனை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழா நடந்தது. இதில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஓடிடி மூலம் முதலில் கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும், தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன. தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களின் ஆடியோக்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.




