சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' | ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் | 61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் | பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா | அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் |

பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இதில் நாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு எல்ஐசி என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு துவக்கத்திலேயே சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தின் தலைப்பு என்னுடையது என இயக்குனர் எஸ்எஸ் குமரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்ஐசி (L I C) என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். இந்த தலைப்பு என்னிடம் உள்ளதால் அதை விக்னேஷ் சிவன் பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்'' என்கிறார் இயக்குனர் எஸ்எஸ் குமரன்.




