ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்து சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்த ஸ்ருதி ரெட்டி, மாடல் அழகியாக வாழ்க்கையை துவக்கினார். பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா புரட்சி' என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்தார். தற்போது அவர் 'விசாரணை கைதி' என்ற படத்தில் வழக்கறிஞராகவும், நட்டி நட்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான விசாரணை கைதிக்கு ஆதரவாக வாதாடி அவரை காப்பாற்றும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
“சினிமா நடிகை ஆகும் கனவுடன்தான் சென்னையில் படித்தேன். சிறிய தேடலுக்கு பிறகு ‛மெரினா புரட்சி' வாய்ப்பு கிடைத்து. இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானேன். என்றாலும் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை விசாரணை கைதி தந்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர்களின் நடிகையாக நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தனது கனவு” என்கிறார் ஸ்ருதி ரெட்டி.




