தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
தமிழில், காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாடோடிகள்-2, சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி உள்பட பல படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. தற்போது முருங்கக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி அகிலை நாயகனாக வைத்து இயக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏஜென்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மம்முட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அதோடு சாக்ஸி வைத்தியா என்பவர் நாயகியாக கமிட்டாகி இருக்கும் நிலையில், இன்னொரு நாயகியாக அதுல்யாவிடம் பேசி வருகின்றனர்.
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத அட்டக்கத்தி நந்திதா, நிவேதா பெத்துராஜ், நிவேதா தாமஸ் போன்ற நடிகைகள் தெலுங்கிற்கு சென்று நடித்து வரும் நிலையில் தற்போது அதுல்யா ரவியும் ஏஜென்ட் படம் மூலம் தெலுங்கில் சென்று நடிக்க உள்ளார்.