ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை : செல்வராகவன் | ஏப்ரல் 10ல் 4 படங்கள் ரிலீஸ் | 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை | 1000 கோடி நிகர வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | காதலைப் போல பிரேக் அப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் : காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக் : 1989ல் ஒரு வெற்றித் தீபாவளி | பிளாஷ்பேக் : தொழில்நுட்ப ரீதியாக விமர்சிக்கப்பட்ட முதல் படம் | நான்கே நாட்களில் 50 கோடியை நெருங்கும் 'வாழ 2' | விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ராஷ்மிகா | 250 பேரில் இருந்து தேர்வானவர் மாளவிகா மனோஜ் : சொல்கிறார் மீரா கதிரவன் |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக கதாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர் கதாசிரியர் பி.பாலச்சந்திரன்(62). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று(ஏப்., 5) காலமானார்.
மோகன்லால், மம்முட்டி நடித்த சில படங்களுக்கு கதை எழுதியுள்ள பாலச்சந்திரன், கடந்த 2016ல் துல்கர் சல்மான் நடித்த, விருதுகள் பல பெற்ற கம்மட்டிபாடம் திரைப்படத்திற்கு கதை எழுதியிருந்தார். ஒருபக்கம் கதாசிரியராக இருந்து கொண்டே, இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வந்தார் மேலும் கேரள சாகித்திய அகாடமி விருது கேரள சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, மம்முட்டி நடிப்பில் வெளியான '1'' என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலச்சந்திரன். கம்மட்டிபாடம் படத்தில் பணியாற்றியபோது இவருடன் நெருங்கிப் பழகிய நடிகர் துல்கர் சல்மான் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.