உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! | 'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் ! | நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா? | ஜீவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த 'தலைவர் தம்பி தலைமையில்' | வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியது: ஏ.ஆர்.ரஹ்மான் மீது கங்கனா பகீர் குற்றச்சாட்டு | முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய் | 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல் | மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர் | கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய் |

பஹத் பாசில் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ஆவேசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அதைத் தொடர்ந்து 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக வடிவேலு, பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அதேபோல மலையாளத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'ஓடும் குதிரை சாடும் குதிரை' படப்பிடிப்பு முடிந்து அந்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதே சமயம் கடந்த வருடம் பிப்ரவரி மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'கராத்தே சந்திரன்' திரைப்படம் குறித்த தகவல்கள் எதுவும் அதன்பிறகு வெளியாகவில்லை.. ஒருவேளை அந்த படம் கிடப்பில் போடப்பட்டதா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பஹத் பாசில் சில வருடங்களுக்கு முன்பு சரிவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராய் என்பவர் தான் இந்த கராத்தே சந்திரன் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




