
சல்மான்கானை அழைத்தது ஏன்? சிரஞ்சீவியிடம் ஆமீர்கான் கேள்வி
அதில் ஒரு பகுதியாக மீடியாக்கள் மும்பாக சிரஞ்சீவி, ஆமீர்கான் இருவருக்குமான கேள்வி பதில் பகுதியும் இடம் பெற்றது. இதில் ஆமீர்கானிடம் எப்போது தெலுங்கு படங்களில் நடிக்க போகிறீர்கள் என சிரஞ்சீவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆமிர்கான் தெலுங்கு படங்களில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாகவும், அதேசமயம் சிரஞ்சீவி தற்போது மலையாள லூசிபர் ரீமேக் நடித்துவரும் காட்பாதர் படத்தில் தன்னை அழைப்பதற்கு பதிலாக சல்மான்கானை அழைத்து நடிக்க வைப்பது ஏன் என்றும் பதிலுக்கு சிரஞ்சீவியிடம் ஒரு கேள்வியை வைத்தார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, அந்த படத்திற்கு சல்மான்கான் போன்ற கட்டுமஸ்தான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நடிகர் தான் தேவைப்பட்டாரே தவிர, ஆமீர்கான் போன்ற நடிப்புக்கும் மூளைக்கு வேலையும் கொடுக்கும் நடிகர் தேவைப்படவில்லை. அதனால் தான் உங்களை அழைக்கவில்லை என்று ஆமீர்கானுக்கு ஜாலியான விளக்கம் அளித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!