அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சூப்பர் சிங்கர் 8வது சீசனின் வைல்டு கார்டு ரவுண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ள நிலையில், மக்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு போட்டியாளர்கள் பைனலுக்குள் செல்கின்றனர்.
சூப்பர் சிங்கர் 8-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதற்கிடையே கடந்த 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானசி, ஆதித்யா ஆகியோர்களுக்கு பைனலுக்குள் நுழைய இரண்டாம் வாய்ப்பாக வைல்டு கார்டு ரவுண்ட் நடத்தப்பட்டது. இவர்களில் ஒருவரை மக்களும், இன்னொருவரை நடுவர்களும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஸ்ரீதர் சேனாவும், நடுவர்கள் தேர்வாக மானசியும் தேர்வாகி பைனலுக்குள் செல்கின்றனர். திறமையானவர்களின் மொத்த குவியலாக நடக்கவிருக்கும் இறுதிச்சுற்று போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.