உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இதயத்தை திருடாதே தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. புதுப்புது நிகழ்ச்சிகளையும், மெகா தொடர்களையும் வெளியிட்டு சின்னத்திரை ரசிகர்களை மெதுவாக தன் பக்கம் கவர்ந்து வருகிறது கலர்ஸ் தமிழ் டிவி. இந்நிலையில் அந்த தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "இதயத்தை திருடாதே" என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
முதல் சீசனில் கதாநாயகன் சிவா ஜெயிலுக்கு செல்வது போல் முடிக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் கதைக்களம் 6 வருடம் கழித்து நடைபெறுவது போல் காட்டப்பட்டுள்ளது. கதையில் சிவா பெரிய டான் ஆகி விடுகிறார். நாயகி சஹானாவுக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை உள்ளது. சஹானா மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிறார். சஹானா தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு அவளது தந்தையை பற்றி எதுவுமே கூறாமல் வளர்க்கிறார்.
சிவா பெரிய டான் ஆனது எப்படி?. தன் தாயை மீறி தந்தையைப் பற்றி தெரிந்து கொள்வாரா ஐஸ்வர்யா? இவர்கள் மூவரும் திரும்பவும் சேர்வார்களா? என்ற கேள்விகளுடன் இதயத்தை திருடாதே சீசன் 2 கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஹிட்டான ஒரு சீரியலுக்கு பெரும்பாலும் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது கடினம். அப்படியே ஒரு சில சீரியல்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தற்போது வெளியாகவுள்ள இதயத்தை திருடாதே சீசன் 2 ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுமா?