ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகினி கேரக்டரில் நடித்து வந்த ஆயிஷா, தற்போது தொடரில் இருந்து விலகி விட்டார். கணவனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆயிஷாவை வற்புறுத்தியதால் அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதிலாக தற்போது அதே கேரக்டரில் மேக்னா வின்செண்ட் நடிக்கிறார். மேக்னாவை ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். தெய்வம் தந்த வீடு தொடரில் சீதா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர்.
தெய்வம் தந்த வீடு சீரியலுக்கு பிறகு மலையாள சீரியல்களில் நடித்த மேக்னா, அதன்பிறகு திருணம் செய்து கொண்டு செட்டிலானார். இப்போது பொன்மகள் வந்தாள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான மேக்னா, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார்.