ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சின்னத்திரை தொகுப்பாளினி தேஜஸ்வினி (வயது 25). தனது மாமியார் குடும்பத்துடன் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திங்கள் கிழமைதான் வெளிவந்தது. போலீசார் தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று தேஜஸ்வினி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தேஜஸ்வினியின் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், கணவரின் மனரீதியான டார்ச்சர் தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது:
தேஜஸ்வினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவன்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பவன்குமார் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கும், கல்யாணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பதிவு திருமணம் செய்து கொண்ட இருவரும் துபாய் சென்று சில காலம் வாழ்ந்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் மனம் மாறியதைத் தொடர்ந்து திரும்பி வந்துள்ளனர்.