ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை தேவதர்ஷினி தற்போது சினிமாவிலும் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருபவர், தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த சேனலில் இருந்து விலகி, தற்போது ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். இடையிடையே சினிமாவிலும் நடிக்கிறார்.
இதற்கு முன்பு அவர் முன்னணி சேனலில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஒவ்வொரு வாரமும் புதிய கான்செப்ட்டுகள், நாட்டு நடப்புகளை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. 6 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவை குறைந்து விட்டதாக சேனல் நிர்வாகம் கருதியதாக தெரிகிறது. இதனால் தேவதர்ஷினி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட வெரைட்டியாக நிகழ்ச்சி பண்ணலாம் என்று முடிவெடுத்து தான் சண்டே கலாட்டா நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக தேவதர்ஷினி தரப்பு தெரிவிக்கிறது.