ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரிய திரையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பேய், பிசாசு ஆவிகள் இப்போது சின்னத்திரையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. சாதாரண குடும்ப சீரியல்களில்கூட சில எபிசோட்களில் பேய் கதைகளை திணித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ஆவிகள் கதைக்கென்றே தனி தொடரை ஒளிபரப்புகிறது வேந்தர் டி.வி.
ஆவிகள் தேசம் என்ற இந்த தொடரில் ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்ரவாண்டி ரவிசந்திரன் கலந்து கொண்டு ஆவிகள் பற்றிய விஷயங்களை கூறுகிறார். பின்னர் அதை கதை கருவாக கொண்டு ஒரு சித்தரிப்பு நாடகத்தை ஒளிபரப்புகிறார்கள். அல்லது ஒரு பேய்கதையை ஒளிபரப்புகிறார்கள். பின்னர் அதற்கு விக்ரவாண்டி ரவிச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார். வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.