ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1989ல் சிவா என்ற படத்தில் ராம்கோபால்வர்மாவை இயக்குனராக்கியவர் நாகார்ஜூனா. அதன்பிறகு அன்ஹாம், கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களிலும் அவர்கள் கூட்டணி இணைந்தது. அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில், தற்போது அப்பா-மகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் ஒரு ஆக்சன் படத்தில் மீண்டும் நாகார்ஜூனா-ராம்கோபால் வர்மா இணைகிறார்கள்.
மேலும், அடுத்தபடியாக லட்சுமியின் என்டிஆர் என்ற என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையை பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கயிருந்தார் ராம்கோபால்வர்மா. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜெயசிம்ஹா மற்றும் இன்னொரு தெலுங்கு படத்தையும் முடித்த பிறகே பாலகிருஷ்ணா, லட்சுமியின் என்டிஆர் படத்திற்கு கால்கீட் கொடுத்திருக்கிறாராம்.
அதனால் லட்சுமியின் என்டிஆர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் இயக்க திட்டமிட்டுள்ள ராம்கோபால்வர்மா, முன்னதாக, நாகார்ஜூனா நடிக்கும் படத்தை நவம்பர் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்போகிறாராம்.