மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட துல்கர்சல்மானுக்கு இன்று பிறந்தநாள்.. மலையாளத்தில் மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இன்று அவருக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ உருவாகும் விதமாக இந்த ஐந்து வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது. தற்போது மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் துல்கருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதும் உண்மை..
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிப்பதன் மூலம் நேரடியாக தெலுங்கில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, மலையாளம், இந்தி, தமிழ் என மும்மொழிகளில் உருவாகும் 'சோலோ' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதுதவிர நேரடி தமிழ்படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.
ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அம்சங்கள் இருந்தாலும், தான் எந்த கேரக்டரிலும், எந்த கதையிலும் பொருந்துவேன் என சொல்லும் விதமாக வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் துல்கர் சல்மான். தனது திரையுலக பயணத்தில் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்க துல்கருக்கு நம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.