ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படமும் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. பாகுபலி 2 க்கு ரசிகர்கள் இடையே கிடைத்துள்ள வரவேற்பால் நடிகர் ராணா டங்குபதி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ராணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகுபலி என்னை சினிமா வாழ்க்கையையே மாற்றிய படம். பாகுபலி 2 ம் பாகத்தால் நிச்சயமாக எனது மார்க்கெட் வால்யு உயர்ந்துள்ளது. இப்போது ஏராளமான பட வாய்ப்புக்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளேன்.
வேறு வேறு மொழிகளில் மாறுபட்ட கதைகளை கேட்டு வருகிறேன். பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு முன் இது போன்ற பட வாய்ப்புக்கள் கிடைப்பது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ரசிகர்களுக்கும் இப்போது என் மீது நம்பிக்கை வந்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து ஏராளமான பட நிறுவனங்களும், இயக்குனர்களும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.