ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற இளைஞர்களின் வழியைப் பின்பற்றி ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, நாளை மறுதினம் 26ம் தேதியன்று விசாகப்பட்டிணம், ஆர்கே.பீச்சில் அறவழிப் போராட்டம் ஒன்றிற்கு ஆந்திர இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு பவன்கல்யாண் உள்ளிட்ட பல நடிகர்கள், அமைப்புகள், அரசியல் காட்சிகள்ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக ஹிப்ஹாப் ஆதி ஒரு ஆல்பத்தைக் கடந்த வருடம் வெளியிட்டார். பொங்கலுக்கு முன்பு போராட்டம் ஆரம்பமானதிலிருந்து அடுத்தடுத்து பலரும் ஜல்லிக்கட்டுக்காக ஆல்பங்களை வெளியிட்டார்கள்.
இப்போது அதே பாணியில் பவன்கல்யாணும் 'தேஷ் பச்சாவ்' என்ற தலைப்பில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 'தேசத்தைக் காப்பாற்று' என்ற அந்த ஆல்பம் பவன்கல்யாண் நடித்து மணிசர்மான இசையில் வெளிவந்த 'குடும்பா சங்கர்' படத்தில் இடம் பெற்ற 'லே லே லே...' என்ற பாடலின் ரீ-மிக்சாக உருவாக்கப்பட்டுள்ளது. சற்று முன் இந்தப் பாடலை யு டியுபில் வெளியிட்டுள்ளார் பவன்கல்யாண்.
பிப்ரவரி மாதம் 5ம் தேதிதான் இந்தப் பாடலை வெளியிடுவதாக இருந்தாராம். ஆனால், போராட்டத்தை முன்னிட்டு அதை முன்கூட்டியே இன்றே வெளியிடுவதாக பவன்கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.