ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் பாத்திமா பாபு. செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பும், செய்திக்கேற்ற புருவ அசையும் பாத்திமாவின் தனித்தன்மை. அவரைப் பற்றி அப்போது பரபரப்பாக வதந்தி கிளம்பி பின்னர் அடங்கும்.
ஒரு காலத்தில் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றவர் பின்னர் நடித்தார். தற்போது செய்தி வாசிப்பிலிருந்தும், நடிப்பிலிருந்தும் விலகி இருக்கும் பாத்திமா பாபு. அ.தி.மு.கவில் இணைந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
தற்போது செய்தி சேனல்கள் பெருகிவிட்டது. புதிது புதிதாக செய்தி வாசிப்பாளர்கள் வந்து விட்டார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஸ்டைலுடன் செய்தி வாசிக்கிறார்கள். இந்த இளம் செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்து கவுரவிக்க விரும்பிய பாத்திமா பாபு, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது தனது செய்தி வாசிப்பு அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அனைத்து செய்தி சேனல்களையும் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.