ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் ரம்யா. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார் அவர். இந்நிலையில் ரம்யாவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபல விமர்சகர் ஒருவருக்கு தகாத கெட்ட வார்த்தைகள் கொண்ட டுவிட்டுகள் அனுப்பப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அந்த டுவிட்களை ரம்யா அனுப்பவில்லையாம். யாரோ மர்ம நபர்கள் அவரது டுவிட்டருக்குள் சென்று தகாத வார்த்தைகளை பதிவு செய்து அதை அந்த விமர்சகருக்கு அனுப்பியுள்ளார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கொடுத்ததோடு, இது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.