கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் ரம்யா. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார் அவர். இந்நிலையில் ரம்யாவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபல விமர்சகர் ஒருவருக்கு தகாத கெட்ட வார்த்தைகள் கொண்ட டுவிட்டுகள் அனுப்பப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அந்த டுவிட்களை ரம்யா அனுப்பவில்லையாம். யாரோ மர்ம நபர்கள் அவரது டுவிட்டருக்குள் சென்று தகாத வார்த்தைகளை பதிவு செய்து அதை அந்த விமர்சகருக்கு அனுப்பியுள்ளார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கொடுத்ததோடு, இது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.