ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா மாநிலம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த சட்டக்கலூரி மாணவியான ஜிஷா என்பவர் சில மனித மிருகங்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட டில்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இணையாக இதை அனைவரும் குறிப்பிடுகிறார்கள். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகே வெளியே தெரியவந்துள்ள இந்த கொடூரத்திற்கு எதிராக மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனக்குரல் கொடுத்து வருகிறார்கள். இப்போது நடிகர் பிருத்விராஜும் தனது முகநூலில் இதுபற்றி கொந்தளித்துள்ளார்..
“இதுபோல சம்பவம் இன்று மட்டும் தான் நடக்கிறது என நினைக்கிறீர்களா..? சாதாரண செய்தித்தாளில் ஏதோ ஒரு பக்கத்தில் 3க்கு 4 என்கிற செய்தியாக அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. அனைவருமே இது டில்லியில் தானே நடந்தது.. நமக்கு நடக்கவில்லையே... பெரும்பாவூரில் தானே நடந்தது.. நம் வீட்டில் உள்ளவருக்கு நடக்கவில்லையே என விலகுகிறோம். ஒவ்வொருமுறை இப்படி கொடூரம் நிகழும்போதும் அடுத்தமுறை இப்படி நிகழ்ந்தால் பார்த்துக்கொள்வோம் என ஒதுங்குகிறோம். ஏன் அடுத்தமுறை..? இந்தமுறை ஏதும் செய்யக்கூடாதா..? செய்ய முடியாதா..? தயவுசெய்து மௌனத்தை கொன்று அநீதிக்கு எதிராக போராட வெளியே வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.