ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை லிஸி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர். இயக்குனர் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் அவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் "லிஸியின் தந்தை நான்தான், லிஸி என்னை தனியாக தவிக்க விட்டுவிட்டார். அவர் எனக்கு மாதம்தோறும் பணம் தரவேண்டும்" என்று கேரள மாநிலம் மூவாற்றுப்பிளையை சேர்ந்த வர்க்கி என்பவர் உள்ளூர் ஆர்.டி.ஓவிடம் புகார் செய்தார். அவரும், வர்க்கி தான் லிஸியின் தந்தை என்பதை உறுதி செய்து, லிஸி மாதம்தோறும் வர்கிக்கு 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்தும், வர்க்கி, என் தந்தை இல்லை என்று கூறி லிஸி, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் வர்க்கி, லிஸியின் தந்தை என்பதை உறுதி செய்து உதவி தொகையை 10 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லிஸி ஐகோர்ட் பென்ஞ்சில் மேல்முறையீடு செய்தார். அங்கும் லிஸி, வர்க்கிக்கு 10 ஆயிரம் வழகவேண்டும் என்று உத்தரவு வந்தது. இருந்தாலும் லிஸி, வர்க்கி தன் தந்தை இல்லை என்று தொடர்ந்து வாதாடி வருகிறார்.
இந்த நிலையில் வர்க்கி, தான்தான் லிஸியின் தந்தை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ மரபணு சோதனைக்கு தயார் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து லிஸி விளக்கம் அளிக்குமாறு கோர்ட் கூறியுள்ளது. இதனால் விரைவில் வர்க்கீசுக்கு மரபணு சோதனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.