ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ்-பார்வதி நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' 150வது நாளை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் இதுதானே மலையாள சினிமாவுக்கு உற்சாக டானிக்காக இருக்க முடியும். கேரள மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான இருவரின் (காஞ்சனமாலா - மொய்தீன்) காதலை எந்த வித மிகைப்பூச்சும் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொன்னதுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முதல் படி.. இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப்படத்திற்காக ஏழு வருடங்கள் தன்னை வருத்திக்கொண்டு தந்த கடின உழைப்பு இரண்டாவது படி..
மொய்தீன்-காஞ்சனமாலாவாக திரையில் தோன்றி ரசிகர்களை கட்டிப்போட்ட பிருத்விராஜ்-பார்வதியின் அபார நடிப்பு வெற்றிக்கான மூன்றாவது படியாக அமைந்தது. இந்தப்படத்தின் 150வது நாள் வெற்றிவிழாவை கொச்சியில் உள்ள கோகுலம் டவரில் வைத்து கொண்டாடி படக்குழுவினர் அனைவருக்கும் 150வது நாள் ஷீல்டு வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விழாவில் பிருத்விராஜ்-பார்வதி, படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் மற்றும் படக்குழுவினர், திரையுலக வி.ஐ.பிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.