ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராகி விட்டார். அதனால் சின்னத்திரையில் ஆங்கராக இருக்கும் பலருக்கும் இப்போது சினிமா ஆசை தலைதூக்கி விட்டது. அந்த வரிசையில் அதே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இன்னொரு நடிகர்தான் மா.கா.பா.ஆனந்த். இவர், கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். முதல் படம் வெற்றி பெறவில்லை என்றபோதும், அதற்கடுத்து நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் மா.கா.பா.ஆனந்த்.
இந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், இப்போது பஞ்சு மிட்டாய், நவரச திலகம், அட்டி, தீபாவளி துப்பாக்கி போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தயாராகி விட்டன. இந்த படங்களைப் பொறுத்தவரை ஜாலியான காமெடி ஹீரோவாகவே நான் நடித்திருக்கிறேன். காரணம். சினிமாவில் புதிதாக என்ட்ரியாகியிருக்கும் நான், வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறேன் என்று சொல்லி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
அதன்காரணமாக, பஞ்சுமிட்டாய் படத்தில் புரோட்டா மாஸ்டராகவும், தீபாவளி துப்பாக்கியில் வீட்டுக்கு அடங்காத பையனாகவும், அட்டியில் மரண கானா பாடகராகவும், நவரச திலகத்தில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞனாகவும் நடிக்கிறேன். இப்போதைக்கு இந்த மாதிரி பெரிய ரிஸ்க் இல்லாத வேடங்களில் நடிப்பதுதான் சரியானது. மேலும், எனக்கு காமெடி சென்ஸ் அதிகம் என்பதால், நான் நடிக்கும் படங்கள் சீரியசான கதைகளாக இருந்தாலும்கூட, காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.