'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி | புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்கு சினிமாவில் 48வது பிறந்தநாள் | தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் |
சினிமா நடிகையான ஜானகி தேவி மதுரை வட்டார படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் ஜானகி தேவி, சீரியலில் நல்ல சம்பளம் கிடைப்பதாகவும், சினிமாவில் தன்னை போன்ற நடிகைகளுக்கு மரியாதையே இல்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், 'சினிமாவில் நயன்தாராவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட, எங்களைப் போன்றோரின் சம்பளம் இப்போதும் மிகக்குறைவு தான். நான் நடிக்க போகும் இடத்தில் சென்னை ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மட்டுமே ஏசி ரூம் தருவார்கள். என் போன்ற நடிகர்களுக்கு மரியாதையே இருக்காது' என்று கூறியுள்ளார். மேலும், சீரியலில் நடித்த பின்பு தான் சினிமாவில் கூட ரூ.25000 சம்பளம் கிடைப்பதாக கூறியுள்ளார்.