பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் | பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது |
கானா பாட்டின் மூலம் சென்னையை கலக்கி பின் உலக அளவில் பேமஸ் ஆனவர் இசைவாணி. தமிழின் முதல் பெண் கானா பாடகரான இவர், பிபிசி நிறுவனத்தின் 2020ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியிலில் இடம் பிடித்து புகழடைந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவர் மீது லைம் லைட் வெளிச்சத்தை பாய்ச்சி செலிபிரேட்டியாக பிரகாசமடைய செய்தது. இன்று மேடை கச்சேரிகளில் பிசியாக வலம் வரும் இசைவாணி, சினிமாவிலும் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். கடந்த காலங்களில் குடும்ப சூழ்நிலை, திருமண உறவில் பிரச்னை என தொடர்ச்சியாக பல கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வந்த இசைவாணி, இன்று தனது வாழ்க்கையில் வெற்றிநடை போட்டு முன்னேறி வருகிறார். அதற்கேற்றார் போல் புது கெட்டப்பில் ஆளேமாறிப்போய் கெத்தாக நின்று போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இசைவாணியின் இந்த வெற்றியை கண்டு மகிழ்ச்சியடையும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.