காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். தற்போது பெயிலில் ரிலீஸாகியுள்ள அர்னவ், செல்லம்மா தொடரிலேயே ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், 'செல்லம்மா' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள், 'நீங்க எப்போ செல்லம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?. அந்த மேகாவ துரத்திவிட்ருங்க. அப்போதான் சீரியல் நல்லாருக்கும்' என்று கூறுகின்றனர்.
அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அர்னவின் நிஜவாழ்க்கையும், அவர் நடிக்கும் சீரியலின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதை சுட்டிக்காட்டி 'இவனே பொண்டாட்டிய விரட்டிவிட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்கான். இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே இந்த அப்பாவி பெண்கள்' என அர்னவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.