மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி |
விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் முகம் பதித்தவர் ராமர். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய நபராக கலந்து கொண்டு வருகிறார். என்னதான் தொலைக்காட்சி பிரபலம் என்ற போதிலும், ராமர் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரி என்றும் பெயரெடுத்துள்ளார். ராமர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சக விஜய் டிவி தோழர்களான டைகர்கார்டன் தங்கதுரை, ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் மற்றும் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களை அவர்கள் தங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து ராமரின் இந்த வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.