'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? |
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று சினிமாவில் கால் பதிக்க போராடிக்கொண்டிருப்பவர் நடிகர் ப்ரஜின். இவர் தனது சக தோழியான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்ட்ராவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில காலங்கள் நடித்துவந்தார். அதன்பின் அவர் பெரிதாக திரையில் தோன்றவில்லை. இந்த க்யூட்டான ஜோடிக்கு மித்ரா, ருத்ரா என அழகான இரட்டை குழந்தைகளும் உள்ளது.
இந்நிலையில் பல நாட்களாக சாண்ட்ராவை யாரும் திரையிலோ, சோஷியல் மீடியாக்களிலோ பார்க்காத நிலையில் அவரது புகைப்படத்தை ப்ரஜின் பகிர்ந்துள்ளார். அதில், 'இரட்டை குழந்தைகளின் அம்மா காபியுடன் ரிலாக் செய்து கொண்டிருக்கிறார்' என கேப்ஷனும் போட்டுள்ளார். சாண்ட்ராவின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த வீஜே தியா மேனனும் 'நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி சேச்சி' என கமெண்ட் அடித்துள்ளார். அதுபோல் ரசிகர்கள் பலரும் சாண்ட்ராவை நலம் விசாரித்து வருகின்றனர்.